ஒரு டோஸ் கூட போடாத 4 கோடி பேர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : பார்லி.,யில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, சுகாதாரத் துறை இணை அமைச்சர் பார்தி பிரவீன் பவார் நேற்று முன்தினம் எழுத்து மூலம் அளித்த பதில்:கடந்த18 வரை, அரசு தடுப்பூசி மையங்களில் 178 கோடியே 38 லட்சத்து 52 ஆயிரத்து 566 டோஸ் தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளன.

இன்னும் நான்கு கோடி பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளவில்லை.கடந்த மார்ச் 16 முதல் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் ‘பூஸ்டர் டோஸ்’ இலவசமாக போடப்பட்டு வருகிறது. 18 வயது முதல் 59 வயதினருக்கு ஏப்.10ல் இருந்து பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.

latest tamil news

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்தும் சிறப்பு முகாம் கடந்த 15ல் தொடங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.