ஜனாதிபதி மாளிகை ,அலரிமாளிகைக்கு சேதம்:தொல்பொருள் திணைக்களம் விசாரணை

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகைக்கு ஏற்பட்டிருக்கும் சேத விபரம் தொடர்பில் முழுமையான விசாரணை இடம்பெறுவதாக தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்காக இரண்டு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த அலுவலகங்களில் உள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது அடையாளங் காணப்பட்டுள்ளது .

இந்தப் பொருட்களில் சில  திருடப்பட்டுள்ளன. பொதுச் சொத்து மற்றும் தேசிய மரபுரிமைகளுக்கு உட்படும் இடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதும் அங்குள்ள பொருட்களைத் திருடுவதும் தண்டனைக்குரிய பாரிய குற்றமாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.