புதுடில்லி: பராமரிப்பு வழக்கில் மகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கும்படி, தந்தைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில், பிரிந்து வாழும் மனைவி, மகளுக்கு முறையே மாதம், 8,000 ரூபாய் மற்றும் 400 ரூபாய் வழங்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், 2018 ஏப்ரலுக்குப் பின் இத்தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து, 2020ல் வழக்கு விசாரணைக்கு வந்த போது, இரு வாரங்களுக்குள் இருவருக்கும், 2.50 லட்சம் ரூபாய் பாக்கியை வழங்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்கு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.,சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கடந்த ஆண்டு மனைவி இறந்து விட்டதாகவும், அவர் இறக்கும் வரை அனைத்து நிலுவை தொகையை செலுத்தி விட்டதாகவும் தந்தையின் வழக்கறிஞர் தெரிவித்தார். அதோடு மகளுக்கு பராமரிப்பு தொகை தருவதை தந்தை சுமையாக கருதுவதாகவும் கூறினார்.அதற்கு மகள் ஒரு சுமையல்ல என தெரிவித்த அமர்வு, அவருக்கு நிலுவைத் தொகை, 50 ஆயிரம் ரூபாயை ஆக., 8க்குள் வழங்கும்படி தந்தைக்கு உத்தரவிட்டது. அத்துடன் தந்தையை சார்ந்து இருக்கக் கூடாது எனவும், மகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement