தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளைய தினம் ஈரோடு, கரூர், தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழையும், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வரும் ஆகஸ்ட் 1 மற்றும் 2ம் தேதிகளில் சென்னை மற்றும் அதன் அருகாமை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.