உருது பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறையா..? சர்ச்சையில் பீகார் முதல்வர் ..!

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளமும் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி ஆட்சி நடத்துகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இஸ்லாமிய மாணவர்கள் அதிகம் இருக்கும் மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனும் கல்வித்துறையின் அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

வெள்ளிக்கிழமை விடுமுறையும் ஞாயிற்றுக்கிழமை பள்ளியும் நடைபெறுவதாக பீகார் அரசு அறிவித்துள்ளது. இதனை கண்டித்து பாஜக தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள துணை முதல்வர் கிஷோர் பிரசாத் ”விடுமுறைகள் தொடர்பான உத்தரவுகளை அரசு தான் வெளியிடுகிறது. இந்த விஷயத்தில் கல்வித் துறை ஆலோசித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

பாஜக எம்.பி.,யும், ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தவாதியுமான ராகேஷ் சின்ஹா, தன் சமூக வலைதள பதிவில், ‘வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பது ஏற்புடையது அல்ல. 99 சதவீத முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட துருக்கி கூட ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தான் கடைப்பிடிக்கிறது'” என்றார்.

“கல்வியுடன் மதத்தை கலப்பது ஏற்க முடியாதது ” என உள்ளூர் பாஜக தலைவர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். பீகாரின் கால் பள்ளிக்கல்வித்துறையை தனது வசம் வைத்துள்ளார் முதல்வர் நிதீஷ் குமார். இந்நிலையில் இப்படிப்பட்ட நிகழ்வு பீகார் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.