கேரளா: கேரளாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர் 17 நாள் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கொல்லம் வந்த 34 வயது ஆண் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டது. திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர் குணமடைந்துள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.