கோபிச்செட்டிப்பாளையம் அருகே இரு கார்கள் மோதி விபத்து

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே அதிவேகமாக சென்ற இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஸ்கரன் என்பவர் தமது குடும்பத்தினருடன் காரில் பெங்களுரு சென்று கொண்டிருந்தார். கோபிச்செட்டிப்பாளையம் அருகே சென்றபோது, சரக்கு வாகனத்தை பாஸ்கரன் முந்த முயன்றதாக கூறப்படுகிறது.

அதே சமயத்தில், மற்றொரு காரும் பாஸ்கரனின் காரை முந்த முயற்சித்தது. அப்போது, எதிர்பாராவிதமாக அந்த கார் பாஸ்கரனின் கார் மீது மோதியதில், இரு கார்களும் சாலையோர விவசாய நிலத்தில் புகுந்து நின்றன. இந்த விபத்தில், இரு கார்களில் பயணித்தவர்களும் காயமின்றி தப்பினர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.