செஸ் ஒலிம்பியாட்  2 ஆம் சுற்று : அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி

மாமல்லபுரம்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் 2ஆம் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

நேற்று முன் தினம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும், 44ஆம் செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று போட்டிகளில் இந்தியா பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது தெரிந்ததே.

நேற்று இந்த போட்டியின் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் நடந்தன.  இதிலும் இந்தியா பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதன் விவரம் வருமாறு

ஆடவர் இந்திய எ அணி மால்டோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

ஆடவர் இந்திய பி அணி எஸ்டோனியா அணியை வீழ்த்தியது.

ஆடவர் இந்திய சி அணி மெக்சிகோ அணியைத் தோற்கடித்தது.

மகளிர் இந்திய ஏ அணி அர்ஜெண்டினாவை வீழ்த்தியது.

மகளிர் இந்திய பி அணி வாட்லியா அணியை வென்றது.

மகளிர் இந்திய சி அணி  சிங்கப்பூர் அணியைத் தோற்கடித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.