மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்த 27 வயதான இலங்கை தமிழ்ப்பெண்! சோக சம்பவத்தின் பின்னணி


தமிழகத்தில் இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் உயிரை மாய்த்து கொண்ட சோக சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் கோட்டூர் இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் பிரதீபன் (33). இவர் கடந்த 2006-ம் ஆண்டு இலங்கையில் இருந்து தமிழகம் வந்தார்
அதே முகாமுக்கு பவித்ரா (27) என்பவரும் வந்தார்.

அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தினர். 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் பிரதீபனுக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று பிரதீபன் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார்.

மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்த 27 வயதான இலங்கை தமிழ்ப்பெண்! சோக சம்பவத்தின் பின்னணி | Sri Lankan Tamil Girl Dies Tamilnadu Investigation

Representative

அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரதீபன் தனது மனைவி பவித்ராவிடம் நீ இறந்தால் தான், நான் நிம்மதியாக வாழ முடியும் என திட்டினார்.
இந்த வார்த்தைகளை கேட்டு பவித்ரா மனவேதனையுடன் இருந்து வந்தார்.

வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் பதித்ரா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து பவித்ராவின் தந்தை நடராஜன் தந்த புகாரில் வழக்குப்பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரதீபனை கைது செய்துள்ளனர்.

மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்த 27 வயதான இலங்கை தமிழ்ப்பெண்! சோக சம்பவத்தின் பின்னணி | Sri Lankan Tamil Girl Dies Tamilnadu Investigation

PTI



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.