சென்னை: ஆகஸ்ட் 3ம் தேதி அனைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 3ல் வேலை நிறுத்தம் செய்வதாக சிஐடியூ நோட்டீஸ் அளித்துள்ள நிலையில் போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ வேலை நிறுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளது.