கண்ணீர் விட்டு 30 தொகுதியை தக்க வைக்க ம.ஜ.த., முயற்சி| Dinamalar

பெங்களூரு : ”ஒரு பக்கம் ஜனதா ஜலதாரே, மற்றொரு பக்கம் கண்ணீர் மழை. ம.ஜ.த., படகில் தந்தை, மகன்கள், பேரப்பிள்ளைகள் மட்டுமே கரை சேரலாம். மற்றவர்கள் மூழ்குவது உறுதி,” என பா.ஜ., சாடியது.இது தொடர்பாக, நேற்று டுவிட்டரில் பா.ஜ., கூறியதாவது:ம.ஜ.த.,வில் ஒரு பக்கம் ஜனதா ஜலதாரே, மற்றொரு பக்கம் கண்ணீர் மழை பொழிகின்றனர். மொத்தத்தில் தண்ணீரோ, தண்ணீர். அடுத்த சட்டசபை தேர்தலுக்கு பின், ம.ஜ.த., மூழ்கும் என்பதற்கு, இதுவே அடையாளம்.

ம.ஜ.த., படகில் தந்தை, மகன்கள், பேரப்பிள்ளைகள் மட்டுமே கரை சேரலாம். மற்றவர்கள் மூழ்குவது உறுதி,.அடுத்த முறை தேர்தலில், கண்ணீர் விட்டாவது 30 தொகுதிகளை வைத்துக்கொள்ள, ம.ஜ.த., பரிதவிக்கிறது. வானிலை ஆய்வுத்துறை தெரிவிக்கும், மழை புள்ளி – விபரங்கள் தவறலாம். ஆனால் தேர்தல் நெருங்கி வரும் போது, ம.ஜ.த., தலைவர்களின் கண்ணீர் மழை கணக்கும், தவறவே தவறாது.

இல்லாத கண்ணீரை, அழுத்தி வரவழைப்பது வழக்கம்.முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு, நாங்கள் வாழ்த்து தெரிவிக்கிறோம். உங்களின் (குமாரசாமி) ஜனதா ஜலதாரே திட்டத்தை மிஞ்சும் அளவுக்கு, மற்றொரு திட்டம் வகுத்துள்ளீர்கள். ம.ஜ.த., கண்ணீர் மழை திட்டம் வெற்றி பெறட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.