ஜூலையில் யுபிஐ மூலம் 628 கோடி மின்னணுப் பணப் பரிமாற்ற நடவடிக்கைகள்..

ஜூலை மாதத்தில் யுபிஐ தளம் மூலம் 628 கோடி மின்னணுப் பணப் பரிமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு ஏப்ரலில் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை உள்ள மாதங்களிலேயே இது அதிக எண்ணிக்கையாகும்.

இந்த நடவடிக்கைகளில் 10 இலட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் என்பிசிஐ தெரிவித்துள்ளது.

முந்தைய ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடவடிக்கைகளின் எண்ணிக்கை இருமடங்காகவும், தொகையின் மதிப்பு 75 விழுக்காடும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.