ம.பி., மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்: முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அறிவிப்பு

ஜபல்பூர்: மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். ஜபல்பூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென தீவிர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வந்தனர். அப்போது அதிஷ்டவசமாக தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பல நோயாளிகள் விபத்தில் சிக்கி இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டட்டுள்ளது. விபத்து காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தீ பற்றி மற்ற பகுதிகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. மின் கசிவால் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தீயணைப்பு படை அதிகாரி அகிலேஷ்; தீ பிடித்த மருத்துவமனையில் சிக்கியிருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த ஆழ்ந்த இழப்பைத் தாங்கும் வலிமையையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் குடும்பத்தினருக்கு ஆற்றலைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் கலெக்டருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். இந்த விவகாரம் முழுவதையும் கண்காணிக்க தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நிவாரணம் மற்றும் மீட்புக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.