விளையாடச் சென்ற குழந்தை பள்ளத்தில் வழுக்கி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் தேங்கிநின்ற மழைநீரில் விழுந்து ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னச்செம்மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் – வள்ளிமீனா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், வள்ளிமீனா தனது முதல் குழந்தையை அழைத்துக் கொண்டு மூப்பபட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சின்னச்செம்மேட்டுப்பட்டியில் உள்ள தனது பாட்டி முருகாயி வீட்டில் கவின்சாரதி என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை வளர்ந்து வந்தான். இதையடுத்து நேற்று மழை பெய்த காரணத்தால் பாட்டி வீட்டு அருகே இருந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது.
அப்போது வெளியே விளையாடச் சென்ற சிறுவன் சேற்றில் வழுக்கி பள்ளத்தில் விழுந்து நீரில் முழ்கி பலியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவலறிந்த உத்தப்பநாயக்கணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி ஒன்றரை வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.