இலங்கையில் கொவிட் ஓமிக்ரான் பிஏ5 (B.A5)

உலகில் மிக வேகமாக பரவும் கொவிட் ஓமிக்ரான் பிஏ5 (B.A5)வகை திரிபு கொழும்பு பிரதேசத்தில் பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் திரிபு, முதன்முறையாக இலங்கையில் பதிவாகியுள்ளது. எதிர்காலத்தில் அதிகளவான நோய்த்தொற்றாளர்கள் பதிவாகலாம். கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் கொவிட் அலையை உருவாக்குவதில் இந்த திரிபு தாக்கம் செலுத்தியுள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மரபணு பகுப்பாய்வின் படி, இந்த Omicron துணை வகை இலங்கையில் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் மிக வேகமாக பரவும் கொவிட் ஓமிக்ரான் பிஏ5 (B.A5)வகை திரிபு கொழும்பு பிரதேசத்தில் பரவ ஆரம்பித்துள்ளது  

இங்கு காணப்படும் பிறழ்வு பெரும்பாலும் டெல்டா வகையைப் போலவே இருப்பதால் நோய் அறிகுறிகள் வேகமாக அதிகரிக்கும் என்று உலக விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

முன்னர் நோய்த்தொற்று ஏற்பட்டதன் ஊடாக அல்லது தடுப்பூசிகள் மூலம் உடலில் அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தியின் திறன் குறைவடையும் நிலை இந்தப் புதிய வகை திரிப்பால் ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளதால், மிக விரைவாக பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு பேராசிரியர் மக்களிடம் விசேடமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 எனவே, தற்போது நாட்டில் பரவி வரும் கொவிட் (B.A 5) உப வகை எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தானதாக அமையலாம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டி உள்ளார். பெரும்பாலும் டெல்டா வகையைப் போலவே இருப்பதால் நோய் அறிகுறிகள் வேகமாக அதிகரிக்கும் என்று உலக விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.