நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகம் உள்பட 10இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…

டெல்லி:  சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நேஷனல் ஹெரால்டு நிறுவனம் மற்றும் அது சம்பந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி புகாரில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே சில நாட்கள் விசாரணை நடத்தி முடித்த  நிலையில் இன்று நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகம் மற்றும் அந்நிறுவனத்துக்கு சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது. நேஷனல் ஹெரால்டு அலுவலகம் உட்பட 10 இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.