டெல்லி: 2022 ஜூலையில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 6 பில்லியன் யூபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர், யூபிஐ பரிவர்த்தனையில் இது மிகப்பெரிய சாதனையாகும் என பாராட்டு தெரிவித்திருக்கிறார். தொழில்நுட்பங்களை ஏற்படுத்திலும், பொருளாதாரத்தை சீராக்குவதிலும் இந்திய மக்களின் கூட்டான முடிவு இது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.