டெல்லி : எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. 2018ல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 4800 கோடி ரூபாய் அளவிற்கு நெடுஞ்சாலை துறை டெண்டரில் முறைகேடு நடந்தாக புகார் வைக்கப்பட்டது.