கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய பிரபல அலுவா மகாதேவ ஆலயம்..!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கொச்சியில் அமைந்துள்ள பிரபல அலுவா மகாதேவ ஆலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கோவிலைச் சுற்றி வெள்ளநீர் சூழ்ந்தபடி செல்கிறது. அங்கு பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இதனால் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து ஆற்றில் அதிகளவு வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

கேரளாவில் பல மாவட்டங்களில் கனமழை தொடர்பான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.