தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், இன்று மாலை ஓபிஎஸ் ஆலோசனை. சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று மாலை 5 மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு வரும் நிலையில், இன்று மாலை ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபடுகிறார். அதன்படி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்ட ஆதரவாளர்களுடன் ஆலோசிக்கிறார் ஓபிஎஸ்.