அரியணை ஏறும் சசிகலா – ஓபிஎஸ்.,க்கு பறந்த மெசேஜ்; எடப்பாடி அன்கோ கப்சிப்!

பிளவுகளைக் கடந்து அதிமுக நிச்சயமாக ஒன்றிணையும் என, வி.கே.சசிகலா தெரிவித்து உள்ளார்.

அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முதல் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன மாயத்தேவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது உடல் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு அதிமுக தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக,

சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1972 ஆம் ஆண்டு கட்சி தொடங்கிய போது நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுகவுக்கு சுயேட்சை சின்னமாக வழங்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத்தேவர்.

உடல்நலக் குறைவு காரணமாக காலமான அவருக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளேன். மாயத்தேவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரட்டை இலை சின்னம் தான், அதிமுகவின் நிரந்தர மற்றும் வெற்றி சின்னமாக அமைந்து விட்டது. பிளவுகளை கடந்து அதிமுக நிச்சயம் ஒன்றிணையும். அம்மா ஆட்சி விரைவில் அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க, ஓ.பன்னீர்செல்வத்துடன் சசிகலா இணைய உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில், பிளவுபட்டிருக்கும் அதிமுக, நிச்சயமாக இணையும் என, சசிகலா தெரிவித்துள்ளது, அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே மனநிலையில்,

தரப்பினரும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக விரைவில் ஓ.பன்னீர்செல்வம் – சசிகலா சந்திப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.