ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கும் ஓணம் பண்டிகையையொட்டி எழும்பூர்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மலையாள மொழி பேசும் கேரள மக்கள் மற்றும் தென் தமிழகத்தில் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த பண்டிகை 10 நாட்கள் வண்ணப் பூக்களை கொண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தாண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது.
image
இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் – நாகர்கோவில் சிறப்பு ரயில் செப்டம்பர் 12 திங்கட்கிழமையன்று சென்னையில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.55 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.