காஷ்மீரில் துப்பாக்கி சூடு..!- சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு..! பதற்றச் சூழல்..!!

ஜம்மு காஷ்மீர் புத்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற மோதலில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள புத்காம் மாவட்டம் வாட்டர்ஹெய்ல் கான்சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து உடனடியாக பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதிக்கு பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்தனர்.
இந்நிலையில் பாதுகாப்பு படை வீரர்களை கண்டதும் அந்த பகுதியில் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். உடனடியாக சுதாரித்த பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சூடு நடந்தது. பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தொடர் தாக்குதலில் இதுவரை சுமார் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்த 3 தீவிரவாதிகளும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட 3 லஷ்கர் லத்தீப் ராதர் எனும் பயங்கரவாதி மிகவும் முக்கியமானவன் என்பது தெரியவந்துள்ளது. லத்தீப் ராதர், காஷ்மீர் பண்டிட்டுகளான ராகுல் பட், அம்ரீன் பட் உள்பட பலரை சுட்டுக் கொன்றவன் என்பதும், பாதுகாப்பு படை வீரர்களால் தேடப்பட்டு வந்தவன் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கிடைத்த உளவு தகவல் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் மண்டல போலீசார் இணைந்து தீவிர சோதனை நடத்தினர். இதில், சர்குலர் சாலையில் தஹாப் பகுதி அருகே 25 கிலோ முதல் 30 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அதனை செயலிழக்க செய்ய கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் காஷ்மீர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.