சாதி, மத மோதல்களுக்கு காரணம் இது தான்.. சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதை மருந்தின் பயன்பாடும், அதற்காக அடிமையாகிறவர்களின் தொகையும் அதிகமாகி வருவதை நினைக்கும்போது கவலையும் வருத்தமும் கூடவே செய்கிறது.

கடந்த ஆட்சியில் இது பற்றி போதிய கவனம் செலுத்தாமல் விட்டதன் காரணமாக இந்த சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று சொன்னாலும், நாம் இதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம் என்பது மட்டுமே இப்போது எனக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு ஆறுதல்.

தமிழகத்துக்குள் போதைப்பொருள் நுழைவதை நாம் முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுத்து ஆக வேண்டும். போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

போதைப் பொருள் ஆபத்து குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் முக்கிய கடமை. பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.

இதே கடமை பள்ளி ஆசிரியர்களுக்கும் உண்டு, கல்லூரி நிர்வாகத்திற்கும் உண்டு. போதை என்னும் சமூக தீமையை அனைவரும் சேர்ந்து தான் தடுக்க வேண்டும்.

வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் அனைவரும் போதைப் பொருள் விற்க மாட்டேன் என உறுதி ஏற்க வேண்டும். போதைப் பொருள் விற்பவர்களை கைது செய்து அவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும்.

போதைப் பொருள் தான் சாதி, மத மோதல்களுக்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது. போதைப் பொருள் என்பது தனி மனித பிரச்சினை அல்ல. போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது” என்று கூறினார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.