பெங்களூரு : சுதந்திர தின விழாவை விமரிசையாக கொண்டாட மூன்று கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.நாட்டின், 75ம் ஆண்டு சுதந்திர அமுத பெருவிழாவை ஒட்டி, நாடு முழுதும் இம்முறை சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாட மத்திய, மாநில அரசு திட்டமிட்டுள்ளது.அந்த வகையில், பெங்களூரு மானக் ஷா பரேட் மைதானத்தில், முதல்வர் பசவராஜ் பொம்மை தேசிய கொடி ஏற்றி வைக்கிறார்.விழா பணிகள் ஏற்பாட்டுக்கு பொதுப்பணித்துறை கமிஷனர் தலைமையிலும்; புரோட்டோகால் எனும் நெறிமுறை செயல்படுத்த மாவட்ட கலெக்டர் தலைமையிலும்; கலை நிகழ்ச்சிகளுக்கு கல்வி துறை கமிஷனர் தலைமையிலும் என விழா விமரிசையாக கொண்டாடும் வகையில், மூன்று கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத், நகர போலீஸ் கமிஷனர் பிரதாப்ரெட்டி, மாவட்ட நிர்வாக உயர் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.அப்போது, மைதானத்தை சுற்றி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு, என்னென்ன கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, அமுத பெருவிழாவை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும், மாநகராட்சி சார்பில், பெங்களூரில் சட்டசபை தொகுதி வாரியாக நாளை, நாளை மறுநாள் இரு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement