நிதி நிறுவனத்தில் போலி நகை அடகு வைத்து ரூ.40 லட்சம் மோசடி – பெண் ஊழியர் கைது

கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்து 40 லட்சம் ரூபாயை மோசடி செய்த பெண் ஊழியரை காவல் துறையினர்  கைது செய்தனர்.

குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் ஐ.சி.எல். பின்கார்ப் என்ற தனியார் நிதிநிறுவனத்தின் அடகு நகைகளை அதன் தணிக்கையாளர்கள் மற்றும் நகை மதிப்பீட்டாளர்கள் சரிபார்த்தனர்.

அப்போது, கடந்த நவம்பர் மாதம் முதல் 597 கிராம் போலி நகைகளை வைத்து 40 லட்சத்து 80 ஆயிரத்து 900 ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அங்கு உதவி மேலாளராக பணிபுரிந்து வந்த சத்யா என்பவரை கைது செய்ததுடன், மோசடியில் தொடர்புடைய 2பேரைத் தேடி வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.