பாரீஸ் விமான நிலையத்தில் கலாட்டா செய்த நபர்… கத்தியை உருவியதால் பொலிசார் அதிரடி


*பாரீஸ் விமான நிலையத்தில் நுழைந்த நபர் ஒருவர் கத்தியை உருவியதைத் தொடர்ந்து பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

*இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் சற்று முன் நடந்தேறியுள்ளது.

இன்று காலை உள்ளூர் நேரப்படி 8:20 மணியளவில் பாரீஸ் விமான நிலையத்துக்குள் நுழைந்த ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகளைத் தொந்தரவு செய்துள்ளார்.

அதைத் தொடர்ந்து அவர்கள் பொலிசாரை அழைத்துள்ளார்கள். பொலிசாரைக் கண்டதும் அங்கிருந்து அந்த நபர் நகர்ந்தாலும், பாதுகாவலர்களை இழிவாக பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்.

திடீரென அவர் கத்தி ஒன்றை உருவ, பொலிசார் அவரை எச்சரித்திருக்கிறார்கள். அதையும் மீறி அவர் பொலிசாரை நெருங்க, பொலிசார் ஒருவர் அவரைத் தனது துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.

துப்பாக்கியால் சுட்டதில் அந்த நபர் உயிரிழக்க, அவரது உடல் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. அவர் யார் என்பது தெரியாத நிலையில், அவர் வெள்ளையரல்லாத ஒருவர் என சம்பவத்தைக் கண்ணால் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
 

பாரீஸ் விமான நிலையத்தில் கலாட்டா செய்த நபர்... கத்தியை உருவியதால் பொலிசார் அதிரடி | Knife Was Drawn The Police Swung Into Action

Copyright AFP



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.