ப்ரேக்கப் ஆனபிறகும் தொடர்ந்து டார்ச்சர் செய்த இளைஞர் – இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோட்டில் காதல் பிரேக்கப் செய்தபிறகும் காதலன் தொடர்ந்து டார்ச்சர் செய்துவந்ததால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியராஜ். எலக்ட்ரீசியனான இவரது மனைவி அரசுப்பள்ளி ஆசிரியர். இவர்களுடைய மகள் திவ்யா(20)  மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரியில் பிஏ முடித்துவிட்டு உயர்கல்வி படிப்பிற்காக தயாராகி வருகிறார். இந்த நிலையில் சூழிகோணம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் திவ்யாவை காதலித்து வந்துள்ளார். திவ்யாவும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காதலை தொடராமல் திவ்யா ரஞ்சித்தை பிரேக்கப் செய்துள்ளார். ஆனாலும் ரஞ்சித் செல்போன் மூலம் அழைத்தும் தொடர்ந்து திவ்யாவை பின்தொடர்ந்தும் டார்ச்சர் செய்து வந்துள்ளார். மேலும் ரஞ்சித்துடன் திவ்யா சேர்ந்து எடுத்த ஜோடி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வளைதலங்களில் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
image
அதன்பிறகு திவ்யா வேறு ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ரஞ்சித்தின் டார்ச்சர் தொடரவே இது சம்பந்தமாக குழித்துறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இரண்டு தரப்பும் சமரசமாக சென்றுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கடந்த வாரம் திவ்யாவை ரஞ்சித் பின்தொரடவே ஆத்திரமடைந்த திவ்யாவின் சகோதரன் ரோஷன் மேத்தியூ, அவரது நண்பர்களுடன் சென்று ரஞ்சித்தை தட்டி கேட்கவே மேத்தியூ மற்றும் அவரது நண்பர்களை ரஞ்சித் மற்றும் அவரது மண்கடத்தல் நண்பர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர்.
image
இதில் காயமடைந்த அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மனமுடைந்து காணபட்ட திவ்யா நேற்று வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த மார்த்தாண்டம் போலீசார் உடலைக் கைபற்றி உடல் கூறு ஆய்விற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக திவ்யாவின் பெற்றோர்கள் மகள் மரணத்திற்கு காரணமான ரஞ்சித் உட்பட நண்பர்களை கைதுசெய்ய கேட்டு புகார் அளித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.