மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து திட்டம் – முதல்வர் செம அறிவிப்பு!

இந்தியாவில் பல்வறு பகுதிகளில் இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் அறிமுக படுத்தப்பட்டது.

தமிழகத்தில் மகளிருக்கு இலவச பேருந்து இருப்பது போல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலவசப் பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார்

60 வயதுக்கு மேற்பட்ட ஒரு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என இன்று நடைபெற்ற அரசு விழாவில் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் முதல்வரின் இந்த அறிவிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேச மாநிலத்தை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.