மொஹர்ரம் பண்டிகை தீ மிதித்து நேர்த்தி கடன்| Dinamalar

தங்கவயல் : சாம்பியன் முஸ்லீம் பகுதியில் நேற்று மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு தீ மிதித்து தங்களின் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.தங்கவயல் சாம்பியன் ரீப் முஸ்லீம் பகுதியில் 137 ஆண்டுகளாக மொஹர்ரம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை அவர்களின் பாரம்பரிய தொழுகை, நோன்பு, நேர்த்தி கடன் செலுத்துதல் என வழிபாடுகளை நடத்தினர். இதில் தீமிதி நிகழ்ச்சியும் இடம்பெற்றது. ஏராளமானோர் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை பாசில் பாஷா, ஹாக்கில் பாஷா, முஸ்தா குத்து ஆகியோர் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.