லால்பாக்கில் இசை நீரூற்றுதோட்டக்கலை துறை முடிவு| Dinamalar

பெங்களூரு, : பிருந்தாவனம் போன்று, லால்பாக் பூங்காவில் இசை நீரூற்று அமைப்பதற்கு தோட்டக்கலை துறை முடிவு செய்துள்ளது.மாண்டியா மாவட்டம், கே.ஆர்.எஸ்., அணை முன் பிருந்தாவனம் பூங்கா அமைந்துள்ளது.

மைசூரு, மாண்டியா வரும் சுற்றுலா பயணியர் பிருந்தாவனம் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டுவர்.அங்குள்ள இசை நிரூற்று சுற்றுலா பயணியரை வெகுவாக ஈர்க்கும். தினமும் இரவு 7:00 மணி முதல், 9:30 மணி வரை இசை நீரூற்று நிகழ்ச்சி நடக்கும். இசைக்கு ஏற்ப நீரூற்று நடனம் ஆடும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.இது போன்று பெங்களூரிலும் செயல்படுத்த வேண்டும் என்பது பலரது கோரிக்கை. அதற்கான காலம் கை கூடி வந்துள்ளது.லால்பாக் பூங்காவில் இசை நீரூற்று அமைப்பதற்கு தோட்டக்கலை துறை திட்டமிட்டுள்ளது. பூங்காவில் இரண்டு கோடி ரூபாயில் மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரபூர்வமாக அரசு அறிவிக்க உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.