வாக்குரிமை பறிபோகும் அபாயம் – அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை!

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த இந்த எட்டு ஆண்டுகளில் பல மாநிலங்களில் அக்கட்சி ஆட்சி அமைத்துள்ளது. சில மாநிலங்களில் ஆளும் கூட்டணியில் பாஜக முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலங்களில் செல்வாக்கு மிக்க பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்து வரும் வேலையை பாஜக செய்துவருவதால் முக்கிய கட்சிகள் பாஜகவுக்கு எதிராக பேசிவருகின்றன.

பீகாரில் பாஜக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறி காங்கிரஸ், ஆர்ஜேடி ஆதரவுடன் மீண்டும் இன்று ஆட்சியமைக்கிறது.

இந்த சூழலில் உத்தரபிரதேச எதிர்க்கட்சித் தலைவர்
அகிலேஷ் யாதவ்
பாஜகவுக்கு எதிரான தனது கருத்துக்களை காத்திரமாக முன்வைத்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், ஜவ்வா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார் அகிலேஷ் யாதவ்.

அப்போது பேசிய அவர், “பாஜக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளைப் பெறுகிறது. ஆனால், அவர்களுக்கான உரிமையை பா.ஜ.க கொடுக்கவில்லை. உங்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. அரசியலமைப்புச் சட்டமும் தாக்கப்படுகிறது.

பாஜக இப்படியே அதிக சக்தி வாய்ந்ததாக மாறினால், வாக்களிக்கும் உரிமையையும் நீங்கள் இழக்க நேரிடும். இதை நீங்கள் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளவேண்டாம். இன்று, இந்தியாவின் சொத்துகளையெல்லாம் பாஜகவினர் விற்கிறார்கள். அதோடு, அவர்கள் ஒட்டுமொத்த நாட்டையும் தொழிலதிபர்களுக்கு வழங்கியிருக்கின்றனர். இவர்கள் இன்னும் சில நாள்கள் தங்கினால் நாம் அடிமைகளாகி விடுவோம்.

இன்று ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், வரலாற்றை உற்றுப் பார்த்தால், மூவர்ணக் கொடியை எதிர்த்தவர்கள் இவர்கள்தான்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.