வீடு புகுந்து கொல்லப்பட்ட Dyfi பெண் நிர்வாகி… கைதான காதலன் – கேரளாவில் அதிர்ச்சி!

கேரள மாநிலம், பாலக்காடு சித்திலஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யப்ரியா (24). இவர் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி பிரிவான, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொத்தநல்லூர் பகுதி செயலாளராக இருந்து வந்தார்.

கொலைசெய்யப்பட்ட சூர்யப்ரியா

மேலும் அந்தப் பிரிவின் சார்பாக சித்திலஞ்சேரி பகுதியில சில முக்கிய குழுக்களில் உறுப்பினராகவும் இருந்தார். மேலர்கோடு பஞ்சாயத்து உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்த நிலையில், இன்று காலை சூர்யப்ரியா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சுஜீஸ் என்ற 27 வயது இளைஞர் வீட்டுக்குள் நுழைந்து, சூர்யப்பிரியாவை கொலைசெய்திருக்கிறார். இதையடுத்து, அவராகவே காவல் நிலையம் சென்று கொலைசெய்ததை ஒப்புக்கொண்டு சரணடைந்திருக்கிறார்.

கொலை

அதன் பிறகுதான் கொலை சம்பவம் வெளியில் தெரிந்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் சூர்யப்ரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சூர்யப்ரியாவை கொலைசெய்ததற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. முதற்கட்ட விசாரணையில் சூர்யப்ரியா, சுஜீஸ் இருவரும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.

சூர்யப்ரியா

காதலித்த பெண்ணையே காதலன் கொலைசெய்திருப்பது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் சுஜீஸிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.