2 மாத இடைவெளியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று..!!

 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, கடந்த ஜூன் மாதத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரது மகள் பிரியங்கா காந்திக்கும் லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 

இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார். 

இரண்டு மாத இடைவெளியில், இரண்டாவது முறையாக கொரோனா தொற்றுக்கு பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.