சென்னை:
நடிகர்
கார்த்தி
நடிப்பில்
இயக்குநர்
முத்தையா
இயக்கத்தில்
இன்று
விருமன்
திரைப்படம்
வெளியாகியுள்ளது.
இயக்குநர்
சங்கரின்
மகள்
அதிதி
இந்தப்
படத்தில்
நடித்திருப்பது
படத்தின்
ப்ரோமோஷனுக்கு
மிகப்
பெரிய
பலமாக
அமைந்தது
குறிப்பிடத்தக்கது.
இந்தப்
படம்
தொடர்பான
பத்திரிக்கையாளர்
சந்திப்பு
ஒன்றில்
நடிகர்
கார்த்தி
இரண்டு
குழந்தைகள்
பெற்றுக்
கொள்வதன்
அவசியத்தை
கூறியிருக்கிறார்.
விருமன்
நடிகர்
சூர்யாவின்
2டி
என்டர்டைன்மெண்ட்ஸ்
தயாரிப்பு
நிறுவனம்
விருமன்
திரைப்படத்தை
தயாரித்துள்ளது.
கடைக்குட்டி
சிங்கம்
திரைப்படத்தை
தொடர்ந்து
இரண்டாவது
முறையாக
ஒரு
படத்தை
சூர்யா
தயாரிக்க
கார்த்தி
அதில்
கதாநாயகனாக
நடித்திருக்கிறார்.
கடைக்குட்டி
சிங்கம்
மிகப்
பெரிய
வெற்றி
பெற்ற
திரைப்படம்
என்பதால்
விருமன்
திரைப்படத்திற்கும்
அதிக
எதிர்பார்ப்பு
உள்ளது.

இரண்டாவது
வாய்ப்பு
அதேபோல
கொம்பன்
திரைப்படத்தை
தொடர்ந்து
மீண்டும்
கார்த்தியுடன்
இணைந்திருக்கிறார்
இயக்குநர்
முத்தையா.
நடிகர்
கார்த்தி
நடிப்பில்
வந்த
படங்களில்
கொம்பன்
முக்கியமான
படமாக
கருதப்படுகிறது.
பருத்திவீரன்,
கொம்பன்,
கடைக்குட்டி
சிங்கம்
திரைப்படங்களை
தொடர்ந்து
நான்காவது
முறையாக
கிராமத்து
கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார்.
இயக்குநர்
மணிரத்தினத்திடம்
துணை
இயக்குநராக
பணியாற்றியவர்
கார்த்தி.
இதுவரை
அவர்
இயக்கத்தில்
மட்டும்தான்
இரண்டு
முறை
நடித்துள்ளார்.
அவரை
தவிர்த்து
முத்தையா
தான்
கார்த்தியை
இரண்டு
படங்களில்
இயக்கிய
இயக்குநராம்.

உடன்
பிறப்புகள்
நடிகர்
சூர்யாவும்
கார்த்தியும்
அண்ணன்
தம்பிகள்
என்பது
ஊர்
அறிந்த
விஷயம்.
இவர்கள்
இருவருக்கும்
பிருந்தா
என்கிற
ஒரு
தங்கையும்
உண்டு.
பிருந்தா
சிவகுமாரும்
திரைப்படங்களில்
பணியாற்றியுள்ளார்.
மிஸ்டர்
சந்திரமௌலி,
ராட்சசி,
ஜாக்பாட்,
பொன்மகள்
வந்தாள்,
ஓ2
போன்ற
படங்களில்
பின்னணி
பாடகியாக
பாடல்கள்
பாடியுள்ளார்.

இரண்டாவது
குழந்தை
நடிகர்
கார்த்திக்கு
உமையாள்
என்கிற
மகள்
முதலில்
பிறந்தார்.
தங்களுக்கு
ஒரு
குழந்தை
போதும்
என்று
முடிவு
எடுத்திருந்தார்களாம்
கார்த்தியும்
அவரது
மனைவியும்.
ஒருமுறை
தனக்கு
உடல்நிலை
சரியில்லாத
போது
தனது
தங்கை
அவருடைய
சொந்த
பிள்ளைகளை
விட்டுவிட்டு
என்
பிள்ளையை
வந்து
பார்த்துக்
கொண்டார்.
அதேபோல
என்
மனைவிக்கு
உடல்நிலை
சரியில்லாத
நேரத்தில்
நான்
குழந்தையை
பார்த்துக்
கொள்ள
வேண்டிய
நேரத்தில்
என்
மனைவியின்
தம்பி
மருத்துவமனையில்
தனது
அக்காவிற்கு
துணையாக
நின்றார்.
அதுவும்
அவரது
திருமண
நேரத்தில்.
அப்போதுதான்
உடன்பிறப்புகள்
எவ்வளவு
முக்கியம்
என்று
தான்
உணர்ந்ததாகவும்
அதன்
பிறகு
தான்
தனது
இரண்டாவது
பிள்ளை
கந்தன்
பிறந்தார்
என்றும்
கார்த்தி
ஒரு
நிகழ்வில்
கூறியுள்ளார்.