
சுதந்திரம் தானாகக் கிடைத்து விடவில்லை. பலரின் போராட்டங்களும், நுட்பமான செயல்பாடுகளும் ஆங்கிலேயரை விரட்டியடிக்க காரணமாக இருந்தது.

போராட்டத்திற்கு முன்பும், சுதந்திரம் கிடைத்த பிறகும் இந்தியாவின் நிலை எப்படி இருந்தது, சுதந்திரத்துக்கு தன்னுடைய பங்களிப்பை அளித்தவர்கள் யார் என்பதை குறித்து விளக்கும் 10 புத்தகங்கள்…

இந்திய சுதந்திரத்தின் போது வெடித்த வன்முறை, ஆங்கிலேய அரசுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் ஏற்பட்ட பதற்றம், நவீன இந்தியாவின் உருவாக்கம் போன்றவற்றை நுணுக்கமாக பதிவு செய்யும் புத்தகம்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மிக கொடூர தாக்குதலில் ஒன்றான ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கும் புத்தகம்.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் காலம் இந்தியாவுக்கான இருண்ட காலம் என குறிப்பிட்டதோடு, இந்தியாவுக்கு நாகரிகத்தை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் பேரரசு என்பதை மறுத்து தெளிவான விளக்கங்கள், வரலாற்று தரவுகள் மற்றும் வாதங்களை முன்வைத்த புத்தகம்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் விடுதலை போராட்டம் குறித்து மொத்தமாக தொகுக்கப்பட்ட வரலாற்று நூல்.

சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா எந்த வகையில் எல்லாம் பிரச்னைகளை எதிர்கொண்டது என்பதை விளக்கும் புத்தகம்.

நவீன இந்தியாவில் ஒரே நேரத்தில் வெவ்வேறான புரட்சிகள் நடந்தன. அந்த புரட்சிகளை மேற்கொண்ட தலைவர்களே நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள், இந்தியா என்றொரு தேசம் உருவானவதை எடுத்துரைக்கும் நூல்.

நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான போது மாகாண அரசின் தலைவர்களுக்கு மாதத்திற்கு இருமுறை கடிதம் எழுதினார். இத்தொகுப்பு குடியுரிமை, போர் மற்றும் அமைதி, சட்டம் ஒழுங்கு, ஆட்சி மற்றும் ஊழல் போன்றவற்றை உள்ளடக்கியது.

இந்திய வரலாற்றில் அறியப்படாத தகவல்கள் மற்றும் உண்மைகளை எடுத்துரைக்கும் புத்தகம்.

சுதந்திர போராட்டத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கட்டமைத்த ராணுவம், அதன் செயல்பாடுகளை விளக்கும் புத்தகம்.

அம்பேத்கரின் அரசியல் பங்கெடுப்புகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஏற்படுத்திய நம்பிக்கை போன்றவை குறித்த புத்தகம்.

இதுபோல நீங்கள் படித்த புத்தகங்கள், பிறர் படித்து அறிந்துக் கொள்ள வேண்டும் என நினைக்கும் புத்தகங்களை குறிப்பிடவும்.