சென்னை: நிதியமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் நடந்திருக்க கூடாது என்றும் அது தவறு என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். தொண்டர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது என்றும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். அமைதியை விரும்பும் கட்சியான பாஜகவில் இதுபோல நடந்தது வருத்தமளிக்கிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் கூறியுள்ளார்.
