மாணவர்களின் கையிலிருந்த ராக்கியை அறுத்த ஆசிரியர்கள்| Dinamalar

தட்சிண கன்னடா : மங்களூரு காடிபள்ளா தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களின் கையில் இருந்த ராக்கியை, ஆசிரியர்கள் அறுத்து எறிந்ததால், கோபமடைந்த பெற்றோர், பா.ஜ., தொண்டர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.தட்சிண கன்னடா, மங்களூரின், காடிபள்ளாவில் தனியார் கிறிஸ்துவ பள்ளி உள்ளது. ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, மாணவர்கள் கையில் ராக்கி கட்டிக்கொண்டு, நேற்று முன் தினம் பள்ளிக்கு வந்திருந்தனர்.

இதை கவனித்த சில ஆசிரியர்கள், மாணவர்களின் கையில் கட்டியிருந்த ராக்கியை அறுத்து, குப்பை தொட்டியில் போட்டனர். இதையறிந்த பெற்றோர், பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் கேள்வியெழுப்பினர். அப்போது பா.ஜ., தொண்டர்களும், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.தகவலறிந்து அங்கு வந்த, சூரத்கல் போலீசார், சூழ்நிலையை சரி செய்தனர். இறுதியில் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும், கல்வி நிறுவனத்தின் பாதிரியாருக்கும் மாணவர்களின் பெற்றோர் ராக்கி கட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.