எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டீ, எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் 75வது சுதந்திர நாளை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார். இதையடுத்து பல்வேறு விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். அதைத்தொடர்ந்து,  சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலையை திறந்து வைத்தார்.

காந்தி தமிழகம் வந்தபோது மேலாடையை துறந்த நிகழ்வின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அந்த சிலையை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். – இதையடுத்து விடுதலை போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் அடங்கிய புகைப்பட அருங்காட்சியகத்தை திறந்துவைத்து பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.