சென்னை: அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்து – தீப்பிடித்து எரிந்த பேருந்து

தாம்பரம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அடுத்த தாம்பரம் பேருந்து நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையோரம் தனியார் நிறுவனங்களுக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி அதி வேகமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்பகுதியில் மோதியது.
image
மோதிய வேகத்தில் இருசக்கர வாகனமும் பேருந்தும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமானது. இந்த விபத்து குறித்து தாம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.