பீஹார் அமைச்சரவை இன்று விரிவாக்கம்| Dinamalar

பாட்னா: பீஹாரில் இன்று முதல்வர் நிதிஷ் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

பீஹாரில் பா.ஜ.,வுடனான கூட்டணியில் இருந்து, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது. இதையடுத்து லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஏற்பட்டது. இக்கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைத்தன. முதல்வராக நிதிஷ் மீண்டும் பதவியேற்றார். அவருடன் ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் தேஜஸ்வி யாதவும் துணை முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில் நிதிஷ்குமார் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி உறுப்பினர்கள் பெருமளவு நிதிஷ் அமைச்சரவையில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு இன்று காலை 11.30 மணியளவில் கவர்னர் பதவிபிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.