பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய விவகாரம்.. ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது!

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள குறித்து அவதூறாக பேசிய புகாரில் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரவாயலில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பெரியார் சிலையை அகற்றுவது பற்றி பேசியதாக கனல் கண்ணன் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகாரளிக்கப்பட்டது.

இது குறித்து, வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்த போலீசார், புதுச்சேரியில் நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்தவரை கைது செய்தனர். இதனிடையே, கனல் கண்ணனை நீதிமன்ற காவலின் கீழ் வரும் 26ஆம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.