ராஜமலையில் உருவான நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி| Dinamalar

மூணாறு : கேரள மாநிலம் மூணாறு அருகே ராஜமலையில் உருவாகியுள்ள நீர்வீழ்ச்சியை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலையில் உள்ள அபூர்வ இன வரையாடுகளைக் காண சுற்றுலா பயணியரை கடும் கட்டுப்பாடுகளுடன் வனத்துறையினர் அனுமதிக்கின்றனர்.அப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள நீர்வீழ்ச்சியில் தென்மேற்கு பருவ மழையின்போது மட்டும் நீர்வரத்து காணப்படும்.

அப்பகுதியில் எப்பொழுதும் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதால் மழை குறைந்து மேக மூட்டம் விலகிய பின் தான் நீர்வீழ்ச்சியை முழுமையாக ரசிக்க இயலும்.பத்து நாட்களுக்கு மேலாக பெய்த பலத்த மழையில் முக்கிய நீர்வீழ்ச்சி தவிர ராஜமலையில் பல நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளன. அவை மழை குறையும் பட்சத்தில் காணாமல் போய்விடும். தற்போது இயற்கை சூழலில் உருவாகியுள்ள நீர்வீழ்ச்சிகளை கண்டு சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.