38 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஜவான் உடல் கண்டெடுப்பு

சியா்ச்சின்: சியாச்சின் பனிமலைப்பகுதியில் 38 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஜவான் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

உலகின் மிகவும் உயரமான போர்க்களமான சியாச்சின் மலைப்பகுதியில் கடந்த ஞாயிறன்று ஜவான்கள் வழக்கமான ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜவானின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவர் குறித்த விசாரணையில், கடந்த 1984-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேசன் மெகதூத் ‘ என்ற பெயரில் குமாவோன் ரிஜிமெண்ட் படைப்பிரிவை சேர்ந்த 20 பேர் கொண்ட ஜவான்கள் சியாச்சின் பகுதியில் முகாமிட்டிருந்தனர். அப்போது இவர்கள் விபத்தில் சிக்கினர். 15 ஜவான்கள் உடல் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் மட்டும் காணமால் போனதும், அவர் தான் தற்போது மீட்கப்பட்ட உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜவான் சந்திரசேகர ஹர்போலா என்பதும் தெரியவந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.