இந்தியாவில் தினசரி கோவிட் பரவல் 10 ஆயிரத்திற்கு கீழ் சென்றது| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பரவல் 10 ஆயிரத்திற்கு கீழ் சென்றது. கடந்த 24 மணி நேரத்தில் 8, 813 பேர் பாதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,813 பேருக்கு கோவிட் உறுதியானது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 4,42,77,194 ஆனது.

கோவிட்டிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,36,38,844 ஆனது. கோவிட் பாதித்த 29 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5,27,098 ஆனது.

தற்போது 1,11,252 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, 208.31 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.