சென்னை வங்கி கொள்ளை: கோவை நகைக்கடை உரிமையாளரிடம் தீவிர விசாரணை!

சென்னை அரும்பாக்கம் ‘பெட் பாங்க்’ வங்கி கொள்ளை தொடர்பாக கோவையில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீ வஸ்தவ் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்பது தொடர்பாக ஸ்ரீ வஸ்தவ்விடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படும் நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 15 கிலோ தங்க நகைளை விற்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை, அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியில், பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவான, ‘பெட் பாங்க்’ என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த (ஆக.13) பட்டப்பகலில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. வங்கியில் நுழைந்த மர்ம நபர்கள் , பணியில் இருந்த மூன்று ஊழியர்கள் மற்றும் காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கத்திமுனையில் கட்டி போட்டு, லாக்கரில் இருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.

போலீஸார் விசாரணையில் வங்கியில் பணிபுரிந்த ஊழியர் முருகன் முருகன் என்பவர் தன் கூட்டாளிகளுடன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. கொள்ளையர்களை பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொள்ளை சம்பவம் தொடர்பாக முருகன் கூட்டாளிகள் பாலாஜி, 28, சந்தோஷ் , 30, சக்திவேல் ஆகிய 3 பேர் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 18 கிலோ நகை மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான முருகனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இந்தநிலையில், கொள்ளை கும்பல் கொள்ளையடிக்கபப்ட்ட நகைகளை விற்பது தொடர்பாக கோவை நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீ வஸ்தவ்வை தொடர்பு கொண்டதாக கூறப்படும் நிலையில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.