ஜம்மு-காஷ்மீர்: ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து… 6 ITBPF வீரர்கள் பலி, பலர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த் நாக் பகுதியில் இந்தோ-திபெத் எல்லை காவல் படை வீரர்கள் பயணம்செய்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து பிரேக் பிடிக்காமல் பஹல்கம் என்ற இடத்தில் சாலையிலிருந்து விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான பேருந்தில் இந்தோ- திபெத் எல்லை காவல் படை வீரர்கள் 39 பேர் பயணித்தனர்.

ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 6 வீரர்கள் பலி

இந்த விபத்தில் 6 வீரர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. காயமடைந்த பலர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விபத்தில் சிக்கிய வீரர்கள் அனைவரும் அமர்நாத் புனித பாதயாத்திரைக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.