1 முதல் 2-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக்கூடாது – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.!

1-ம் வகுப்பு முதல் 2-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக்கூடாது என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பள்ளிகளில் பறக்கும் படையை கொண்டு ஆய்வு செய்து, ஒன்றாம் வகுப்பு முதல் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆய்வுக்கு பின்னர், வீட்டுப்பாடம் தரப்பட்டதா, இல்லையா என்ற அறிக்கையை சமர்பிக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.