TNEA 2022: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் 2022-23 ம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். 

பொன்முடி வெளியிட்ட சில முக்கிய தகவல்கள்:

– 2022-23 ம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை காட்டிலும் அனைத்து பிரிவிலும் விண்ணப்பித்தோர் இந்த ஆண்டு அதிகம். இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர மொத்தம் 2லட்சத்து 11 ஆயிரத்து  905  மாணவர்கள் விண்ணப்பித்தனர் . 

– கடந்த ஆண்டை காட்டிலும் 36 ஆயிரத்து 900 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.  விண்ணப்பித்தவர்களில் பதிவு கட்டணம்  1லட்சத்து 69ஆயிரத்து 80 மாணவர்கள் செலுத்தினர். 

– அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காட்டில் அரசு பள்ளி மாணவர்களில் 22,587 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

– விளையாட்டு பிரிவில் 3102 விண்ணப்பம் பெறப்பட்டு,  1875 மாணவர்கள் சான்றிதழ் சரிபார்க்ப்ப்பட்டு, 1258 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.

– மாற்று திறனாளி 203 மாணவர்கள் , முன்னாள் ராணுவத்தினர் வாரிசு 970 மாணவர்களுக்கு தரவரிசை வெளியீடு. 

– தமிழ்நாட்டில் 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. அவற்றில் 1லட்சத்து 48ஆயிரத்து 811 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்.

– ஒரே மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான தரவரிசையில் அரசின் புதிய வழிகாட்டுதல்படி +2 மதிப்பெண்ணுடன், 10 ம் வகுப்பு மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்பட்டதால் ஒரு மாணவருக்கு கூட இந்த ஆண்டு சமவாய்ப்பு எண்ணுக்கான ( Random number) தேவை ஏற்படவில்லை. 

– தரவரிசை பட்டியலில்  பெயர் விடுபட்ட மாணவர்கள் , இன்று முதல் 4 நாட்கள்  ( 19.8.22 வரை ) அருகில் உள்ள தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை சேவை மையத்தை ( TFC’s) நாடலாம். மாணவர்கள் கூறும்  குறைகளில் நியாயம் இருப்பின் நிவர்த்தி செய்யப்படும்.

– 6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்றாலும்  , 7.5 விழுக்காடு வேண்டி விண்ணப்பிக்கத் தவறிய  மாணவர்களும் 19.8.22 ம் தேதி வரை  தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை சேவை மையம் சென்று தங்களை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தங்களை இணைத்து கொள்ளலாம்.  இந்த மாணவர்களுக்கு அவர்கள் பெறும் இடத்தில் A B C … என்ற வரிசையில் தர வரிசையில் இணைத்து கொள்ளப்படுவர். உதாரணத்திற்கு 7.5 ஒதுக்கீட்டில் 50 வது இடம் பெறும் மாணவர் தாமதமாக 4 நாளுக்குள் தன்னை இணைத்து கொண்டால் அவருக்கு 50 A …50B என வழங்கப்படும் , இதன் மூலம் 50 வது இடத்தில் தற்போது உள்ள நபருக்கு அடுத்ததாகவும் 51 வது இடத்தில் உள்ளவருக்கு முன்பாகவும் நேர்முகத் தேர்வில் இந்த மாணவர் கலந்து கொள்ள முடியும்). 

– தொழில்நுட்ப கல்வி இயக்க அழைப்பு மையத்தின் எண்ணான 18004250110 -ல் மாணவர்கள் தங்களது கேள்விகளை கேட்டு தெளிவுபெறலாம். 

– முதல் மதிப்பெண்  ரஞ்சிதா , snsm higher sec school கேரளாவின் கொல்லம் . தமிழ்நாட்டு மாணவி. கேரளாவில் பயின்று இங்கு விண்ணப்பித்துள்ளார். ( ஒரு மாணவர்  இந்தியாவில் எங்கு பயின்றாலும்  தமிழ்நாட்டு இருப்பிடச் சான்று வழங்கினால் தமிழ்நாட்டில் பொதுப்பிரிவு பட்டியலில் இடம் பெற்று உயர் கல்வியில் அவர் சேரலாம்)

– 2ம் இடம் ஹரினிகா அவ்வை பள்ளி ,  ஜடையாம்பட்டி , தருமபுரி

– 3 ம் இடம் லோகேஷ் கண்ணன் , வேலம்மாள் மெட்ரிக்பள்ளி .  திருவள்ளூர்

– முதல் 10 இடம் பெற்ற  நபர்களும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். 

மேலும், முதல்வர் அறிவித்தபடி பொறியியல் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் வெளியாக உள்ளது” என்று பொன்முடி கூறினார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.