பாதுகாப்பில் குளறுபடி 3 வீரர்கள் டிஸ்மிஸ்| Dinamalar

புதுடில்லி :என்.எஸ்.ஏ. எனப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் வீட்டில் நடந்த பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக மூன்று பாதுகாப்பு வீரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலுக்கு ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டில்லியில் உள்ள அஜித் தோவலின் வீட்டுக்குள் உயர் ரக கார் ஒன்று கடந்த பிப்ரவரி 16ல் நுழைய முயன்றது.


இதையடுத்து காரை ஓட்டி வந்த நபர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மனநிலை சரியில்லை என போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் மூன்று ‘கமாண்டோ’க்கள் மீது
விசாரணை நடைபெற்றது.இந்நிலையில் அவர்கள் பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பணியிலிருந்து நேற்று நீக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.