புதுடில்லி :என்.எஸ்.ஏ. எனப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் வீட்டில் நடந்த பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக மூன்று பாதுகாப்பு வீரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலுக்கு ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டில்லியில் உள்ள அஜித் தோவலின் வீட்டுக்குள் உயர் ரக கார் ஒன்று கடந்த பிப்ரவரி 16ல் நுழைய முயன்றது.
இதையடுத்து காரை ஓட்டி வந்த நபர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மனநிலை சரியில்லை என போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் மூன்று ‘கமாண்டோ’க்கள் மீது விசாரணை நடைபெற்றது.இந்நிலையில் அவர்கள் பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பணியிலிருந்து நேற்று நீக்கப்பட்டனர்.
புதுடில்லி :என்.எஸ்.ஏ. எனப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் வீட்டில் நடந்த பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக மூன்று பாதுகாப்பு வீரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.தேசிய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்